என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயி கால் முறிந்தது"
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர்-கடலாடி சாலையில் முளைக்கொட்டு திண்ணை பகுதியில் குறுகலான அபாயம் நிறைந்த சாலை உள்ளது. இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
இந்த சாலையை புறவழிச் சாலையாக மாற்ற கடந்த 2013-ம் ஆண்டு ரூ.6ம கோடி நிதி ஒதுக்கப்பட்டும் நிலம் கையகப்படுத்த நிதி தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பணி தொடங்கப்படவில்லை.
இதனால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இன்று காலை தேவர் குறிச்சியைச் சேர்ந்த விவசாயி சீனி (வயது 45) மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அபாயகரமான சாலையில் வந்தபோது, எதிரே சாயல்குடி அரசு பஸ் வந்தது.
அந்த பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சீனி கால் சிதைந்தது. அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்